ஆயுஷ்

ஆயுஷ் வர்த்தகம் மற்றும் தொழில் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நாளை ஆய்வு

Posted On: 03 DEC 2020 4:57PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஸ்ரீபத் நாயக் ஆகியோர் நாளை, 2020 டிசம்பர் 4 அன்று மாலை 4 மணிக்கு ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் வர்த்தகம் மற்றும் தொழில் குறித்து காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொள்வார்கள்.

கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் ஆயுஷ் சிகிச்சை முறைகளை அடிப்படையாகக் கொண்ட  நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்து வரும் தருணத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆயுஷ் வர்த்தகம் மற்றும் தொழில் குறித்த முந்தைய ஆய்வு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி இரு அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், கொவிட்-19 சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆயுஷ் முறையும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தகுந்த நேரத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகள், ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ மேலாண்மை வழிமுறைகள், கொவிடுக்குப் பிந்தைய மேலாண்மை போன்ற பல்வேறு முயற்சிகளினால் ஆயுஷ் அமைச்சகம் கொவிட் சிகிச்சையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678041



(Release ID: 1678102) Visitor Counter : 95