புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி ஈடு இணை இல்லாதது: அமைச்சர் திரு ஆர் கே சிங்

Posted On: 27 NOV 2020 7:08PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி ஈடு இணை இல்லாதது என்று மத்திய மின்சாரம், புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் கூறினார்.

மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியில் (ரீ-இன்வெஸ்ட் 2020), பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு மாநிலங்களின் தொடர் ஒத்துழைப்பு முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.

நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்' என்பது ரீ-இன்வெஸ்ட் 2020-இன் மையக்கருவாகும். புதுப்பிக்கத்தக்க மற்றும் எதிர்காலத்துக்கான எரிசக்தி வாய்ப்புகள் மற்றும் உற்பத்தியாளர்கள், உருவாக்குபவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்காட்சி ஆகியவை இந்த மூன்று நாள் மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676534

*******************



(Release ID: 1676610) Visitor Counter : 221


Read this release in: English , Urdu , Hindi , Telugu