வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தில் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்

Posted On: 26 NOV 2020 4:29PM by PIB Chennai

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்தின் அரசியல் சாசன முன்னுரையை வாசிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

"பட்டியல் பழங்குடியினருக்கான அரசியலைமைப்பின் பாதுகாப்பு" என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கும் நடைபெற்றது. மக்களவை செயலகத்தின் இணை செயலாளர் (ஓய்வு) திரு ரவீந்திர காரிமெல்லா தலைமை உரையாளராக பங்கேற்றார்.

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் மற்றும் அதன் அமைப்பின் அனைத்து அலுவலர்களும் இணைய கருத்தரங்கில் பங்கேற்றனர். விவாதத்தின் போது, வடகிழக்கு சபையின் செயலாளரான திரு கே மோசஸ் சலாய், பின்தங்கிய பகுதிகள், சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவினர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ந்து வரும் முன்னுரிமை துறைகள் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்த (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய) சுவரொட்டிகள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை, வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சக வளாகத்தில் அனைவரும் காணும் வகையில் வைக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676060

-----  



(Release ID: 1676154) Visitor Counter : 139