விவசாயத்துறை அமைச்சகம்

கிராமங்கள் மற்றும் ஏழை விவசாயிகளை தற்சார்பாக்க கூட்டுறவு அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும்: அமைச்சர் திரு தோமர்

Posted On: 24 NOV 2020 7:32PM by PIB Chennai

கிராமப்புறங்களில் திறன் வளர்த்தல் பயிற்சிகளை அளிப்பதற்காக சஹாக்கர் பிரக்யா என்னும் திட்டத்தை மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 45 புதிய பயிற்சிகள் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க கூட்டுறவு சங்கங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தால் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கிராமங்கள் மற்றும் ஏழை விவசாயிகளை தற்சார்பாக்க கூட்டுறவு அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675420

---



(Release ID: 1675477) Visitor Counter : 151


Read this release in: English , Urdu , Marathi