பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

லடாக் துணைநிலை ஆளுநர் - திரு.ஜிதேந்திர சிங் சந்திப்பு


மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை

Posted On: 11 NOV 2020 6:52PM by PIB Chennai

லடாக் துணைநிலை ஆளுநர் திரு.ஆர்.கே.மாதுர், வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஜிதேந்திர சிங்கை சந்தித்து, மத்திய அரசின் நிதியில் லடாக்கில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

 

தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது லடாக் யூனியன் பிரதேசம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலைத் தொடர்ந்து இப்போது ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும் திரு.ஜிதேந்திர சிங்கிடம் துணைநிலை ஆளுநர் விளக்கினார். லடாக்கில், மத்திய அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.  லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்த பாராட்டுகளையும் துணைநிலை ஆளுநரிடம் மத்திய அமைச்சர் திரு.ஜிதேந்திர குமார் தெரிவித்தார். 

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672001

                                                                                     ------



(Release ID: 1672055) Visitor Counter : 139