அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இமயமலையில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள டெக்டானிக் தட்டுகளால் அதிகம் தாக்கப்படும் பகுதியால், நிலநடுக்கம் குறித்த ஆய்வுகள், முன்னறிவிப்புகளில் மாற்றம்

Posted On: 26 OCT 2020 4:02PM by PIB Chennai

லடாக் பகுதியின் இந்திய மற்றும் ஆசிய தட்டுகள் இணையும் பகுதியானது டெக்டானிக் என்று அழைக்கப்படும் கண்டத்தட்டு நகர்வியலால் அதிகம் தாக்கம் ஏற்படக்கூடியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிலநடுக்கம் குறித்த ஆய்வு, முன்னறிவிப்புகள், மலைத் தொடரின் நில அதிர்வு அமைப்புகள் போன்றவற்றில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான டேராடூனைச் சேர்ந்த வாடியா இமாலய புவியியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், புவியியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதன் மூலம் இந்த மாற்றத்தைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667585

**********************



(Release ID: 1667600) Visitor Counter : 232