புவி அறிவியல் அமைச்சகம்

வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை

Posted On: 23 OCT 2020 1:10PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் மண்டல வானிலை மையம் / புயல் எச்சரிக்கை மையம் விடுத்துள்ள தகவல்:

ஒடிசா கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மணிக்கு 24 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில்  வடமேற்கு வங்க கடல் பகுதியில், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 50 கி.மீ தொலைவிலும், பங்களாதேஷின் கேபுபுரா பகுதிக்கு மேற்கு மற்றும் தென்மேற்கே 200 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் அதனையொட்டியுள்ள பங்காளாதேஷ் கடற்கரையை சாகர் தீவுகள் மற்றம் கேபுபாரா பகுதிக்கு இடையே சுந்தர்பன்ஸ் பகுதியில் இன்று கரைகடக்கும் எனத் தெரிகிறது.

இதனால் திரிபுராநாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடுங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666988

•••••

(Release ID: 1666988)



(Release ID: 1667024) Visitor Counter : 150