நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல்

08.10.2020 வரை, நெல் கொள்முதல் கடந்த ஆண்டின் 17.7 லட்சம் மெட்ரிக் டன்னைவிட இவ்வாண்டு 26.3 லட்சம் மெட்ரிக் டன்னாக 48 சதவீதம் உயர்வு

3.28 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 455.60 மெட்ரிக் டன் அவரையும், 52.5 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5079 மெட்ரிக் டன் கொப்பரையும் கொள்முதல்

3314.55 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 11755 பேல்கள் பருத்தி கொள்முதல்

Posted On: 09 OCT 2020 5:02PM by PIB Chennai

2020- 21 கரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

 

 • 8.10.2020 வரையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் நெல் பயிருக்கான கொள்முதல் கடந்த ஆண்டு இருந்த 17.7 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து இவ்வாண்டு 26.3 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது 48 சதவீத வளர்ச்சியாகும்.

நடைபெற்றுவரும் கரீப் பருவத்திற்கான கொள்முதலில்பஞ்சாபில் அக்டோபர் 8, 2020 வரை கடந்த ஆண்டின் 1.6 லட்சம் மெட்ரிக் டன்னை விட இந்த வருடம் 15.99 லட்சம் மெட்ரிக் டன்னாக 900 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

தமிழகத்தில் கடந்த வருடம் 370 மெட்ரிக் டன்னாக இருந்த நெல் கொள்முதல் இந்த வருடம் 9517 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இதேபோல்  உத்தரப்பிரதேசத்தில் சென்ற ஆண்டு 92 மெட்ரிக் டன்னாக இருந்த நெல் கொள்முதல் இந்த வருடம் 4423 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது.

 

மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 30. 70 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திர பிரதேசம் கர்நாடகா தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

8.10.2020 வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 3.28 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 455.60 மெட்ரிக் டன் அவரை கொள்முதல் செய்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் ஹரியானாவில் உள்ள 324 விவசாயிகள் பயனடைவார்கள்மேலும் கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 3961 விவசாயிகள் பயனடையும் வகையில் 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 8ஆம் தேதி வரை 3314.55 லட்ச ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 11755 பேல்களை இந்திய பருத்தி நிறுவனம் 2404 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663157

----- 



(Release ID: 1663240) Visitor Counter : 108