ஜல்சக்தி அமைச்சகம்

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் உயர்மட்டக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் தெலங்கானா, ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் பங்கேற்பு

Posted On: 06 OCT 2020 6:42PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014 இன் கீழ் செயல்படும் உயர்மட்டக் குழுவின் இரண்டாவது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. குழுவின் தலைவரும் மத்திய ஜல் சக்தி அமைச்சருமான திரு கஜேந்திர சிங் ஷெகாவத், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் திரு கே சந்திரசேகர ராவ் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா மேம்பாட்டு வாரியங்களின் எல்லைகளை நிர்ணயிப்பது இக் கூட்டத்தின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது. இரு மாநிலங்களும் கிருஷ்ணாகோதாவரி நதிகளின் புதிய திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கைகள் சமர்ப்பித்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கிருஷ்ணா கோதாவரி நதிகளின் நீரை பங்கிடுவது குறித்து இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த திட்டங்களுக்கான வரைவறிக்கை குறுகிய காலத்தில் தயார் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே  காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662091

                                                              ---- 



(Release ID: 1662172) Visitor Counter : 175