உள்துறை அமைச்சகம்

பிகாரில் ரூ.541 கோடி மதிப்பிலான ஏழு நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களைத் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நன்றி

Posted On: 15 SEP 2020 4:54PM by PIB Chennai

பிகாரில் ரூ.541 கோடி மதிப்பிலான ஏழு நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களைத் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், 2014-ஆம் ஆண்டிலிருந்து மோடி அரசு, பிகார் மாநில மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்து வருகிறது என்றும், பிகார் மாநிலத்தில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நதியோரப் பகுதிகளின் வளர்ச்சி ஆகியவற்றுக்காக ரூ.541 கோடி மதிப்பிலான ஏழு நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வளர்ச்சித் திட்டங்களால், பிகார் மக்களுக்கு சுத்தமான குடிநீரும், மேம்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளும் கிடைக்கும் என்றும், முசாஃபர்பூர் நதிப்பகுதி வளர்ச்சித்திட்டம், சுற்றுலாத் துறைக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய உத்வேகத்தை அளிப்பதோடு ஏராளமான வேலைவாய்ப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தித் தரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

*****



(Release ID: 1654942) Visitor Counter : 88