அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதுமைகளை நோக்கி பள்ளி குழந்தைகளை ஊக்குவிப்பது புதிய கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும்

Posted On: 13 SEP 2020 2:17PM by PIB Chennai

கற்பனைத் திறன் அதிகம் உள்ள குழந்தைகள் தங்களை சுற்றியுள்ள சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகளை கண்டுபிடிக்கின்றனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு அன்றாட சிக்கல்களுக்கான தீர்வுகள் கண்டுபிடிப்பதற்காக குழந்தைகளை அரசு ஊக்குவித்து புதிய கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை விரிவு படுத்துகிறது.

இத்தகைய சிந்தனைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் வரவேற்கப்பட்டு, சிறந்த சிந்தனைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.

மேலும் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும், வழிகாட்டுதலும் கிடைக்கின்றன. 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653754



(Release ID: 1653833) Visitor Counter : 113