குடியரசுத் தலைவர் செயலகம்

பார்சி புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 15 AUG 2020 8:28PM by PIB Chennai

பார்சி புத்தாண்டை ஒட்டி குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில்:-

பார்சி புத்தாண்டின் சிறப்பான தருணத்தில், அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக எனது பார்சி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரித்துக் கொள்கிறேன்.

பார்சி சமூகத்தினருக்கு அன்பு, ஆர்வம் மற்றும் கொண்டாட்டத்துக்கான தருணமாக புத்தாண்டு தினம் உள்ளது. இந்தத் திருவிழா, தேவைப்படுவோருக்கு நமது உதவிக்கரத்தை நீட்ட வேண்டும், நமது வீடுகள், பணியிடங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற செய்தியையும் நமக்கு அளிக்கிறது. தேசக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டில் பார்சி சமூகத்தினரின் பங்களிப்பு, நமக்கு ஊக்குவிப்பாகவும், பெருமையளிப்பதாகவும் திகழ்கிறது.

நல்ல எண்ணம், சொல், செயல் என்ற கொள்கையின் அடிப்படையில் உள்ள பார்சி சமூகத்தினரின் இந்தத் திருவிழா, நல்லவற்றை ஏற்றுக் கொள்ளும் வகையில் நம் அனைவருக்கும் உந்துதலாக இருக்கும். பரஸ்பர நல்லிணக்கத்தின் மூலம் நமது சமூக வாழ்க்கை தொடர்ந்து மேம்படட்டும்.”

குடியரசுத் தலைவரின் செய்தியை இந்தியில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

 

Click here to see President’s message in Hindi

*****



(Release ID: 1646401) Visitor Counter : 144


Read this release in: English , Urdu , Manipuri , Punjabi