நிதி அமைச்சகம்

மெருகேற்றப்பட்ட வைரங்களை மறு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Posted On: 12 JUL 2020 8:22PM by PIB Chennai

தரம் பிரிப்பதற்காகவும், சான்றிதழ் பெறுவதற்காகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும், பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்ட வைரங்களை மறு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்திருப்பது, விலை மதிப்புள்ள கற்கள் மற்றும் நகைகள் தொழில் துறைக்கு ஆசுவாசமளித்துள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

2020 பிப்ரவரி 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை மறு இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டிய அனைத்து பட்டை தீட்டப்பட்ட மற்றும் மெருகேற்றப்பட்ட வைரங்களுக்கும் இது பொருந்தும். கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் இவற்றை மறு இறக்குமதி செய்வதில் உள்ள இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 



(Release ID: 1638260) Visitor Counter : 188