பாதுகாப்பு அமைச்சகம்

கொச்சி தெற்குக் கடற்படை கமாண்டில் உலகச் சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்ட நடவடிக்கைகள்

Posted On: 05 JUN 2020 8:32PM by PIB Chennai

தெற்குக் கடற்படை கமாண்ட், ஜூன் 5-ஆம் தேதியன்று உலகச் சுற்றுச்சூழல் தினத்தை, பல்லுயிர்ப் பெருக்கத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் கடைப்பிடித்தது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை சமுதாயத்தினர் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளையும், சமூக இடைவெளியையும் பராமரித்துக் கலந்து கொண்டனர்.

கொச்சியில், வனப்பாதுகாப்பாளர் டாக்டர் மீனாட்சி தெற்குக் கடற்படை கமாண்டுக்கு வழங்கிய பல்வேறு வகையான மரக்கன்றுகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நட்டனர். எழிமலா, கோவை, கோவா, குஜராத்தில் ஜாம்நகர், மகாராஷ்டிராவில் லோனவ்லா, ஒடிசாவில் சில்கா, மும்பையில் மலாத் ஆகிய இடங்களில் உள்ள கடற்படை அலுவலகங்களில் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொச்சி துறைமுகத்தில் கடலோரத் தூய்மைப் பணிகளும் நடைபெற்றன.



(Release ID: 1629879) Visitor Counter : 189


Read this release in: English , Urdu , Hindi , Telugu