புவி அறிவியல் அமைச்சகம்

அனைத்திந்திய வானிலை முன்னெச்சரிக்கை (IST 20.30 மணியளவில்)

Posted On: 17 MAY 2020 9:51PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம்/ சூறாவளி எச்சரிக்கை பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய (IST 20.30  மணியளவில்) செய்திக் குறிப்பின்படி அம்பன் என்ற மிகக் கடுமையான சூறாவளி புயல், தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் வடக்குமுகமாக கடந்த 6 மணி நேரங்களாக 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து,  17.30 மணியளவில் இன்று 17 மே 2020 அன்று தெற்கு வங்காள விரிகுடாவில் மத்திய பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. 12.0°N அட்சரேகை மற்றும் 86.0°E தீர்க்கரேகை பாராதீப்பிற்கு (ஒடிஷா) தெற்கே 930 கிலோ மீட்டர் தொலைவில், திகாவிற்கு (மேற்குவங்கம்) தெற்கு தென்மேற்கு திசையில் 1080 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புபாராவிற்கு (பங்களாதேஷ்) தெற்கு தென்மேற்கு திசையில் 1200 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து மிக மிகத் தீவிரமான கடும் சூறாவளி புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரங்களில் வடக்குமுகமாக மெல்ல நகர்ந்து வடக்கு -வடகிழக்கு திசையில் திரும்பி வங்காள விரிகுடாவில் வடமேற்கு திசையில் விரைந்து நகர்ந்து மேற்குவங்கம் பங்களாதேஷ் கடற்கரைகளில், திகா(மேற்குவங்கம்), ஹடியா தீவுகள் (பங்களாதேஷ்) ஆகிய இடங்களில் 20 மே 2020 அன்று மதியம்/மாலை மிகக் கடுமையான சூறாவளி புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

தெற்கு வங்காள விரிகுடா, நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் ஆகிய இடங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கிவிட்டது.

*****



(Release ID: 1624854) Visitor Counter : 76


Read this release in: English , Urdu , Hindi