புவி அறிவியல் அமைச்சகம்
தெற்கு அந்தமான் தீவுகளில் முன்கூட்டியே பருவ மழை தொடக்கம்
Posted On:
17 MAY 2020 2:05PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை பிரிவின் தற்போதைய வெளியீடு, தெற்கு அந்தமான் தீவுகளில் முன்கூட்டியே பருவ மழை தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளது.
இதன்படி, வங்களா விரிகுடாவின் தென் பகுதிகள், நிக்கோபர் தீவுகள், அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி விட்டது.
வங்களா விரிகுடாவின் தென் பகுதியின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடல்பகுதியின் மற்ற பகுதிகள், அந்தமான் தீவுகள், மத்திய வங்களா விரிகுடாவின் ஏனைய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிக்கோபர் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் அந்தமான் தீவுகளில் கடந்த 15ம் தேதி முதல் கரு மேகங்கள் காணப்பட்டன
அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது
(Release ID: 1624750)
Visitor Counter : 196