புவி அறிவியல் அமைச்சகம்

வங்கக் கடலின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்நிலை:மே 16ம் தேதி மாலையில் புயலாக மாற வாய்ப்பு

Posted On: 14 MAY 2020 5:28PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு “வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதியில் நேற்று மே 13 ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்நிலை பகுதி வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்நிலையாக இன்று மே 14 ம் தேதி காலையில் நிலை கொண்டுள்ளது.

அது மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தமாக  நாளை மே 15 ம் தேதி உருவாகி, மேலும் வரும் மே 16ம் தேதி அதே பகுதியில் புயல் காற்றாகத் தீவிரமடையக் கூடும். அது ஆரம்பத்தில் மே 17ம் தேதி வரை வங்கக் கடலில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, மே 18, 19 ஆகிய  தேதிகளில் வங்கக் கடலின் வடக்கில் வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகரும்.

இதன் காரணமாக, வங்கக் கடல், அந்தமான் கடல், அந்தமான்-நிகோபர் தீவுகள் ஆகிய பகுதிகளில் மே 16ம் தேதி வாக்கில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் அமைந்துள்ளன.

இதன் விளைவாக, வங்கக் கடலில் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளிலும் அந்தமான் கடலை ஒட்டிய பகுதிகளிலும் மே 15ம் தேதி முதல் வானிலை மோசமாக இருக்கும்.

இதனால் மீனவர்கள் வங்கக் கடலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் மே 15ம் தேதி முதல் மீன் பிடிப்பதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்  படுகிறார்கள். ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் நாளைக்குள் கரைக்குத் திரும்பும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • மேலும், வடக்கு ஆந்திரப் பகுதியில் வங்கக் கடலின் மேற்குப் பகுதியில் மே 18ம் தேதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அதைப் போல் ஒடிசா கடற்கரை வடக்கு வங்கக் கடல் பகுதியில் மே 18ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கெனவே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மே 17ம் தேதி திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


(Release ID: 1624051) Visitor Counter : 94


Read this release in: Odia , English , Urdu , Hindi , Punjabi