ஜல்சக்தி அமைச்சகம்

கிராமப்புறங்களில் சோதனை முறையில் குடிநீர் விநியோகத்தை தொலைஉணர்வு அடிப்படையில் கண்காணிக்க குஜராத் முடிவு

Posted On: 14 MAY 2020 5:33PM by PIB Chennai

நீர் ஆதார இயக்கத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்கும் துறையின் சேவை வழங்கும் முறையை கண்காணிக்க தொலைஉணர் கருவி அடிப்படையிலான முறையை செயல்படுத்த குஜராத் தயாராகியுள்ளது. சோதனை அடிப்படையில், ஏற்கனவே மாநிலத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, குடிநீர் விநியோக செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. அதாவது, கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வழக்கமாக போதுமான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா மற்றும் குறிப்பிட்ட தரத்துடன் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து நீண்டகால அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது.   

அடிப்படையிலேயே குடிநீர் பற்றாக்குறை உள்ள மாநிலமான குஜராத், இந்த நெருக்கடியை மிகவும் சிறப்பான உத்திகள் மூலம் இதுவரை எதிர்கொண்டு வருகிறது. குடிநீர் விநியோக மேலாண்மைக்காக சமூக பங்களிப்பை மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனை குடிநீர் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை மேலாண்மை அமைப்பு மூலம் 2002-ம் ஆண்டில் தொடங்கியது. வலுவான அடித்தளம் மூலம், வருடாந்திர செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவில் சுமார் 70 சதவீதத்தை குடிநீர் சேவை கட்டணங்கள் என்ற வடிவில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

 

=================================



(Release ID: 1624049) Visitor Counter : 151