பிரதமர் அலுவலகம்

நாரி சக்தி விருதுபெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடுகிறார்

Posted On: 07 MAR 2020 12:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லி, லோக் கல்யாண் மார்கில் நாரி சக்தி விருதுபெற்றவர்களுடன் நாளை கலந்துரையாடுவார். 

சர்வதேச மகளிர் தினமான நாளை  சாதனைப் பெண்களால் பிரதமரின் டுவிட்டர் கணக்கு கையாளப்படவுள்ளது.  #SheInspiresUs

குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை காலை நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் நாரி சக்தி விருதுகளை வழங்குவார்.

மகளிருக்கு, குறிப்பாக நலிந்த பிரிவு மற்றும் விளிம்பு நிலை மகளிருக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் சிறப்புமிக்கப் பணியாற்றும் தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படுகிறது. 

***********

 



(Release ID: 1605668) Visitor Counter : 150