பிரதமர் அலுவலகம்
ஓமன் நாட்டின் மன்னர் மேன்மை மிகு சையீத் ஹைதம் பின் தாரிக் அல் சைத்-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
12 JAN 2020 9:37PM by PIB Chennai
ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பேற்கும் மேன்மை மிகு சையீத் ஹைதம் பின் தாரிக் அல் சைத்-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பேற்கும் மேன்மை மிகு சையீத் ஹைதம் பின் தாரிக் அல் சைத்-ஐ நான் மனமார வாழ்த்துகிறேன். அவரது தலைமையின் கீழ், ஓமன் நாடு தொடர்ந்து முன்னேறும், வளம் பெறும் என்பதோடு, உலக அமைதிக்கும் பங்களிப்பு செய்யும் என்று நான் நம்புகிறேன்.
ஓமனுடன் இந்தியா பல ஆயிரம் ஆண்டுகள் உறவு உடையது. நமது முக்கியத்துவம் வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்த மேன்மைமிகு சையீத் ஹைதமுடன் கைகோர்த்துப் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பேற்கும் மேன்மை மிகு சையீத் ஹைதம் பின் தாரிக் அல் சைத்-ஐ நான் மனமார வாழ்த்துகிறேன். அவரது தலைமையின் கீழ், ஓமன் நாடு தொடர்ந்து முன்னேறும், வளம் பெறும் என்பதோடு, உலக அமைதிக்கும் பங்களிப்பு செய்யும் என்று நான் நம்புகிறேன். (@narendramodi)
|
ஓமனுடன் இந்தியா பல ஆயிரம் ஆண்டுகள் உறவு உடையது. நமது முக்கியத்துவம் வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்த மேன்மைமிகு சையீத் ஹைதமுடன் கைகோர்த்துப் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். (@narendramodi)
|
(Release ID: 1599225)
Visitor Counter : 155