பிரதமர் அலுவலகம்

ஹூஸ்டனில் சீக்கிய சமூக உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 22 SEP 2019 7:07PM by PIB Chennai

டெக்சாசின் ஹூஸ்டனில் சீக்கிய சமூக உறுப்பினர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (22.9.19) கலந்துரையாடினார். இந்த சமூக உறுப்பினர்கள் பிரதமருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். இந்த உரையாடலின் போது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சீக்கிய சமூகத்தினருக்கும் மத்திய அரசு மேற்கொள்ளும் சிறப்பான நடவடிக்கைகளுக்காக சமூக உறுப்பினர்கள் பிரதமருக்கு நன்றித் தெரிவித்தனர்.

”ஹூஸ்டனில் சீக்கிய சமூகத்தினருடன் மிகச் சிறப்பான கலந்துரையாடலை நான் நடத்தினேன். இந்தியாவின் வளர்ச்சி குறித்த அவர்களின் ஆர்வத்தைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்” என்று பிரதமர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

*****



(Release ID: 1585847) Visitor Counter : 100