பிரதமர் அலுவலகம்

ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து; முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்

Posted On: 05 SEP 2019 9:47AM by PIB Chennai

ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.

“ஆசிரியர் தினத்தையொட்டி, அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தலைசிறந்த ஆசிரியரும், வழிகாட்டியுமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனுக்கு அவரது பிறந்த நாளில் இந்தியா மரியாதை செலுத்துகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

-------



(Release ID: 1584180) Visitor Counter : 81