பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் ஹமீத் கர்சாய் சந்திப்பு

Posted On: 19 AUG 2019 8:40PM by PIB Chennai

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முன்னாள் அதிபர் திரு ஹமீத் கர்சாய், இன்று (19.08.2019) பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

இன்று ஆப்கானிஸ்தானின் 100வது சுதந்திர தினத்தையொட்டி, 130 கோடி இந்திய மக்களின் சார்பிலும், தமது சார்பிலும், பிரதமர்  ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தமது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்து வரும் வலிமையான ஒட்டுமொத்த ஆதரவுக்காக நன்றி தெரிவித்த முன்னாள் அதிபர், இருநாட்டு மக்களிடையே நிலவும் தனிச்சிறப்பு மிக்க நல்லெண்ணத்திற்காக மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.

அமைதி, பாதுகாப்பு மற்றும் உள்ளார்ந்த நிலைத்தன்மை, ஒன்றுபட்ட, உண்மையான சுதந்திர மற்றும் ஜனநாயக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

 

****



(Release ID: 1582389) Visitor Counter : 94