பிரதமர் அலுவலகம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்

Posted On: 08 JUL 2019 11:38AM by PIB Chennai

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

“உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நிகழ்ந்த பேருந்து விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்களது உற்றாரை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள்  விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மாநில அரசும், உள்ளூர் நிர்வாகமும் வழங்கி வருகின்றன”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நிகழ்ந்த பேருந்து விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்களது உற்றாரை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள்  விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மாநில அரசும், உள்ளூர் நிர்வாகமும் வழங்கி வருகின்றன.

  • நரேந்திர மோடி (@narendramodi) ஜூலை 08, 2019


(Release ID: 1577692) Visitor Counter : 109