வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா மற்றும் கொரிய குடியரசு இடையே ஸ்டார்ட்அப் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 MAR 2019 1:52PM by PIB Chennai

ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான  ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 2019-ல் கையெழுத்திடப்பட்டது. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இருநாடுகளிலும் ஸ்டார்ட் அப் துறையில் உள்ள உறவை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

********



(Release ID: 1569623) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Telugu