மத்திய அமைச்சரவை

இந்தியாவில் முதலீட்டுக்கான கட்டமைப்பை உருவாக்க இந்தியா – சவுதி அரேபியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 FEB 2019 9:13PM by PIB Chennai

இந்தியாவில் முதலீட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு செயல்முறையை  நிறுவுவதற்கு வழிவகுக்கும், இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

நமது நாட்டின் உள்கட்டமைப்பிற்கு தேவையான முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் சவுதி அரேபிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.  நமது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், துணை தொழில் துறைகளின் வளர்ச்சிக்கும், இவற்றின் வாயிலாக ஒட்டுமொத்த பொருளாதார வளம் மற்றும் ஜிடிபி வளர்ச்சிக்கு  இந்த ஒப்பந்தம் உதவும். 

********



(Release ID: 1564410) Visitor Counter : 78