மத்திய அமைச்சரவை

ரே பரேலி, கோரக்பூர், பத்திண்டா, குவஹாத்தி, பிலாஸ்பூர், தியோகர் ஆகிய இடங்களில் தொடங்கப்படும் எய்ம்ஸ் நிறுவனம் ஒவ்வொன்றிற்கும் இயக்குநர் பதவியை உருவாக்க மத்திய அமைசச்சரவை ஒப்புதல்

Posted On: 24 OCT 2018 1:25PM by PIB Chennai

ரே பரேலி(உத்தரப் பிரதேசம்), கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), பத்திண்டா (பஞ்சாப்), குவஹாத்தி (அசாம்), பிலாஸ்பூர் (இமாச்சல பிரதேசம்), தியோகர் (ஜார்கண்ட்) ஆகிய இடங்களில் தொடங்கப்படும் எய்ம்ஸ் நிறுவனங்களுக்கு இயக்குநர்  பதவியை உருவாக்க  பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவிக்கு  அடிப்படை சம்பளமான (நிலையானது) ரூ. 2,25,00/-உடன்   மருத்துவப் பணி  செய்யாததற்கான படி எனினும் ரூ. 2,37,500-க்கு மிகாமல் இருக்கும்.

இயக்குநரே  அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவராக இருந்து நிறுவனத்தின் அனைத்து நிர்வாகத்திற்கும் பொறுப்பேற்பார். இந்நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பணிகளைப் பிரித்து நியமிக்கும் பொறுப்பு அவரையே சாரும்.

****



(Release ID: 1550513) Visitor Counter : 115