நிதி அமைச்சகம்

செப்டம்பர் மாதம், ஜி.எஸ்.டி வருமானம் ரூ. 94,000 கோடியை தாண்டியது ; ஆகஸ்ட் மாதத்தை விட வருவாய் அதிகரித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2018 12:54PM by PIB Chennai

செப்டம்பர், 2018 – ல்  ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ. 94,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ. 15,318 கோடி சி.ஜி.எஸ்.டி, ரூ. 21,061 கோடி எஸ்.ஜி.எஸ்.டி, ரூ. 50,070  கோடி ஐ.ஜி.எஸ்.டி ஆகவும் (இதில் ரூ. 25,308 இறக்குமதியில் வசூலிக்கப்பட்டதாகும்) மற்றும் ரூ. 7,993 கோடி வரி தீர்வையாகும் (இதில் ரூ. 769 இறக்குமதியில் வசூலிக்கப்பட்டதாகும்). மொத்தமாக ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் 30, 2018 வரை 67 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர் 3பி-க்கு வரி கணக்கு தாக்கல் செய்யபடுள்ளது.   

செப்டம்பர் 2018-ல் கணக்குமுடித்தப் பின், மத்திய மற்றும் மாநில அரசின் மொத்த வருவாய் ரூ. 30,574  கோடி சி. ஜி.எஸ்.டி மற்றும் ரூ. 35,015 கோடி எஸ்.ஜி.எஸ்.டி ஆகும்.    

ஆகஸ்ட் மாதம் ரூ. 93,690 வருவாய் வசூலிக்கப்பட்டது. இதை  ஒப்பிடுகையில், செப்டம்பர், 2018 – ல் வருவாய் அதிகரித்து , ரூ. 94, 442 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கீழ் உள்ள வரைபடம் இந்த ஆண்டின் வருவாய் குறித்து தெரிவிக்கிறது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0014RET.png

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1548080) வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Marathi , हिन्दी