மத்திய அமைச்சரவை

மத்திய பட்டியலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை துணை பிரிவுப்படுத்தும் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 AUG 2018 5:08PM by PIB Chennai

மத்திய பட்டியலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை துணை பிரிவுப்படுத்தும் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை நீடிக்க இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மாநில அரசுகள், மாநில பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம், சமுதாய சங்கங்கள், பல பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பிரிவினரோடு இந்த ஆணையம் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் சாதி வாரியான விவரங்கள், மத்திய அரசுத் துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இதே போன்ற விவரங்களையும் இந்த ஆணையம் பெற்றுள்ளது.

மத்திய பட்டியலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை துணை பிரிவுப்படுத்தும் பிரச்சனை தொடர்பான அறிக்கையை தயார் செய்ய ஏற்கனவே ஆணையம் பெற்ற தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள பிற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தோடு மேலும் விவாதங்கள் நடத்த இந்த ஆணையம் விருப்பம் தெரிவித்துள்ளதால் அதன் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுகிறது.



(Release ID: 1542423) Visitor Counter : 179