பிரதமர் அலுவலகம்

பிரதமர் புதுதில்லியில் புதிய தொல்லியல் ஆய்வு அமைப்பின் தலைமையிடத்தை திறந்து வைக்கிறார்.

Posted On: 11 JUL 2018 5:04PM by PIB Chennai

   பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (12.07.2018) புதுதில்லியில் திலக் மார்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் புதிய தலைமையிட கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

  இந்த புதிய தலைமையிடக் கட்டிடத்தில் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய விளக்கொளியும், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் அடங்கியுள்ளன.

   இந்தக் கட்டிடத்தில் 1.5 லட்சம் நூல்களையும் பத்திரிகைகளையும் கொண்ட  மத்திய தொல்லியல் நூலகமும் செயல்படும்.

===============



(Release ID: 1538345) Visitor Counter : 133