நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2018 ஜூலை 18 முதல் தொடங்குகிறது

Posted On: 25 JUN 2018 2:21PM by PIB Chennai

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2018 ஜூலை 18 அன்று தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என மத்திய ரசாயனம் & உரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.அனந்த் குமார் புதுதில்லியில் இன்று தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய திரு. அனந்த் குமார், இதனை தெரிவித்தார்.

இந்த கூட்டத் தொடர் 18 வேலை நாட்களை கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிட்ட திரு. அனந்த் குமார், இந்த கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் பிறப்பிக்கப்பட்ட 6 அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் மசோதாக்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட அலுவல்கள், இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட உள்ளது.



(Release ID: 1536473) Visitor Counter : 99