பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் கருணைத் தொகையை பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து அறிவித்தார்

Posted On: 16 MAY 2018 9:11PM by PIB Chennai

வாரணாசியில் 2018 மே 15 ஆம் தேதி கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையை பிரதமர்  தேசிய நிவாரண நிதியிலிருந்து அறிவித்தார்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.



(Release ID: 1532528) Visitor Counter : 87