பிரதமர் அலுவலகம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 15 MAY 2018 10:45PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளான செய்தி வருத்தத்தை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக இருக்க நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.



(Release ID: 1532237) Visitor Counter : 89