ரெயில்வே அமைச்சகம்

குஷிநகர் ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அறிக்கை

Posted On: 26 APR 2018 11:53AM by PIB Chennai

உத்தரப் பிரதேசம், குஷிநகரில் ஆளில்லா லெவல் கிராசிங் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இளம் பள்ளிக்குழந்தைகள் உயிரிழந்த செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் என் மனவருத்தத்தைப் பகிர்ந்துகொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்குத் தலா ரூ. 2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தோருக்குத் தலா ரூ. 50,000 உதவித் தொகையை ரயில்வே அமைச்சகம் அளிக்கும் என்று அமைச்சர் அறிவித்தார்.

 

*****



(Release ID: 1530368) Visitor Counter : 102