மத்திய அமைச்சரவை
சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்த இந்தியா – ஜோர்டான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
28 FEB 2018 6:27PM by PIB Chennai
மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு குறித்த இந்தியா – ஜோர்டான் இடையோன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்க்கண்ட துறைகளில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது.
- அனைவருக்கும் சுகாதார வசதி செய்து தருதல்
- சுகாதார அமைப்புகள் தொடர்பான ஆளுகை
- சுகாதாரத்துறை சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- சுகாதாரத்துறை ஆராய்ச்சி
- தேசிய சுகாதாரப் புள்ளி விவரம்
- சுகாதார நிதியளிப்பு மற்றும் சுகாதாரப் பொருளாதாரம்
- நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தல்
- viii. புகையிலைக் கட்டுப்பாடு
- காசநோய் அறிதல், சிகிச்சை மற்றும் சிகிச்சை வழங்குதல்
- மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் கட்டுப்பாடு
- பரஸ்பரம் ஏற்புடைய இதர துறை ஒத்துழைப்புகள்
இந்த ஒத்துழைப்பு விவரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கவும் பணிக்குழு அமைக்கப்படும்.
-----
(Release ID: 1522339)
Visitor Counter : 134