பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைச் சுட்டிக்காட்டும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 1:35PM by PIB Chennai

இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் இதுவரை அறியாதவர்களையும், கவனிக்கப்படாதவர்களையும், சேவைகள் கிடைக்கப் பெறாதவர்களையும் எவ்வாறு மேம்படுத்தியது என்பதை விளக்கக்கூடிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்தின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்தின் மீதான பிரதமரின் கவனத்தைத் திரு கோவிந்த் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கான லட்சியத்தில் விளம்பு நிலையில் இருந்தவர்கள் தற்போது முதன்மையான இடத்திற்கு முன்னேறுவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

''இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் இதுவரை அறியாதவர்களையும், கவனிக்கப்படாதவர்களையும், சேவைகள் கிடைக்கப் பெறாதவர்களையும் எவ்வாறு மேம்படுத்தியது என்பது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் எழுதியுள்ளார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கருத்தில் பிரதமரின் கவனம் குறித்து அவர் சுட்டிக்காட்டியதுடன் இந்தியாவின் வளர்ச்சிக்கான லட்சியத்தின் விளம்பு நிலையில் இருந்தவர்கள் தற்போது முதன்மையான இடத்திற்கு முன்னேறுவதாகக் கூறியுள்ளார்.''

***

(Release ID: 2311272)

TV/IR/GS/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311470) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam