பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் விமானப் படையின் பராமரிப்புப் பிரிவுத் தலைவராக ஏர் மார்ஷல் கேஏஏ சஞ்ஜிப் பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 7:22PM by PIB Chennai

இந்திய விமானப் படையின் பராமரிப்புப் பிரிவுத் தலைவராக  ஏர் மார்ஷல் கேஏஏ சஞ்ஜிப் 2026, செப்டம்பர் 1  அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றதும் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

 

1988 செப்டம்பர் 3 அன்று விமானப் படையில் இணைந்த இவர், ஐஎல்-76 மற்றும் போயிங் விமானப் பராமரிப்பில் நீண்ட அனுபவம் பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ள இவர், 2015-ல் விசிஷ்ட சேவா பதக்கமும் , 2026-ல் அதி விசிஷ்ட சேவா பதக்கமும்  பெற்றுள்ளார். பணிநிறைவு பெற்ற ஏர் மார்ஷல் சஞ்சீவ் குராதியாவுக்குப் பதிலாக இவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305675&reg=3&lang=1

செய்திக்குறிப்பு அடையாள எண்: 2305675

****

SS/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305758) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी