பிரதமர் அலுவலகம்
தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு உணர்வு போன்ற பண்புகளை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 10:51AM by PIB Chennai
நமது திறமைகளை மனிதகுலத்தின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தொடர்ந்து பயணிக்கும் நதிகள் நமக்கு கற்றுக் கொடுக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு உணர்வு, கருணை போன்ற பண்புகள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் புதிய பாதையை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சமஸ்கிருத நீதிமொழியையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
மக்கள் தங்களது வாழ்க்கையைச் சேவைக்காகவும், மற்றவர்களின் நலனுக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதை இந்தச் சமஸ்கிருத நீதிமொழி உணர்த்துகிறது. நதிகள் தடையின்றி பாய்ந்து கடலில் கலக்கும் முன் எண்ணற்ற உயிர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதுபோல் மற்றவர்களின் நலனுக்காக நமது நேரத்தையும், திறனையும், வளத்தையும் செலவிட வேண்டும். மனித வாழ்வின் உண்மையான நோக்கம் நிறைவேற தன்னலமற்ற சேவை, கருணை, அனைவரது நலனும் அவசியம்.
***
(Release ID: 2301820)
SS/SV/GS/SH
(रिलीज़ आईडी: 2302051)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada