இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய விளையாட்டு வீரர்களின் தொகுப்பை உருவாக்க, திறமையாளர்களைக் கண்டறியும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 20 AUG 2026 6:38PM by PIB Chennai

2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய விளையாட்டு வீரர்களின் தொகுப்பை உருவாக்கும் நோக்கில், திறனாளிகளை விரைவாகவும் முழுமையாகவும் கண்டறிவதற்கான செயல்திட்டம் ஒன்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கோரியுள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் 63-வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கிய அவர், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு சார்ந்த லட்சியங்களுக்கான அடித்தளப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "நமது நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கான 10 ஆண்டுகாலத் திட்டமிடல் பணிகள், இந்தத் தருணத்திலிருந்தே முழு வீச்சில் தொடங்கப்பட வேண்டும்," என்று அமைச்சர் கூறினார்.

"திறமையாளர்களைக் கண்டறியும் பணி இரண்டு தனித்தனி நிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும். அதைத் தொடர்ந்து, அவர்களின் திறனை மதிப்பிடுவதுடன், அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்குத் தேவையான உடல்தகுதி, ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் திறன் ஆகியவை அவர்களிடம் உள்ளனவா என்பதைத் தீர்மானிப்பதற்காக அவர்களை ஆய்வு செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். பயிற்சிச் சூழலியலை விரிவுபடுத்த அரசு-தனியார் கூட்டாண்மை மாதிரியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301644&reg=3&lang=1

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2301799) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati