PIB Backgrounder
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம்
प्रविष्टि तिथि:
29 JUL 2026 1:34PM by PIB Chennai
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் என்பது நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் தகுதியான மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை கிடைக்கச் செய்ய முற்படும் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு முதன்மை முயற்சியாகும். நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிணையில்லா மற்றும் உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன்களை இத்திட்டம் வழங்குகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வட்டி மானியத்தின் மூலம் பயனாளிகளுக்கு இது மேலும் ஆதரவளிக்கிறது, கல்வியை அடைவதற்கான நிதி தடைகளை குறைக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், 2030-ம் ஆண்டுக்குள் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்வதற்கும், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும் முற்படும் நிலையான வளர்ச்சி இலக்கு 4 ஐ நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இந்தத் திட்டம் பங்களிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா விரைவான விரிவாக்கத்தை கண்டுள்ளது, மொத்த சேர்க்கை விகிதம் 2014-15 -ல் 23.7% -லிருந்து 2023-24-ல் 30.0% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பல திறமையான மாணவர்களுக்கு, நாட்டின் முதலிடத்தில் உள்ள நிறுவனங்களில் தரமான உயர் கல்விக்கான அணுகல் பெரும்பாலும் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக கடினமாக உள்ளது. பலர் கல்விக் கடன்களின் மூலம் இடைவெளிகளை நிரப்ப முயற்சிக்கிறார்கள், ஆனால் இந்தக் கடன்களுக்கான அதிக வட்டி விகிதங்களை வாங்க முடியாத பலர் உள்ளனர். ஐஐடி, ஐஐஎம் மற்றும் நாட்டின் பல உயர்மட்ட நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற இந்த மாணவர்களின் கனவுகள் அவர்களுக்கு தகுதி இருந்தபோதிலும் நிறைவேறவில்லை. 2024 நவம்பர் 6 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் அத்தகைய மாணவர்களுக்கு உதவுகிறது. நாட்டில் நியமிக்கப்பட்ட தரமான உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றில் தங்கள் சொந்த தகுதியின் அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பிணையமில்லாத, உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன்கள் வழங்கப்படும். 8 லட்சம் ரூபாய் வரை ஆண்டு குடும்ப வருமானம் கொண்ட மாணவர்களுக்கு 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் எளிமையானது, வெளிப்படையானது, மாணவர்களுக்கு ஏற்றது. முற்றிலும் டிஜிட்டல் முறையில் இது கிடைக்கிறது. மாணவர்கள் கல்விக் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும், அவர்களின் விண்ணப்பங்களின் நிலையைக் கண்காணிக்கவும், வட்டி மானியத்தைக் கோரவும், குறைகளை எழுப்பவும் ஒரு ஒருங்கிணைந்த இணையதளம் உள்ளது.
இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இருந்து உருவாகிறது, இது பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. நிதிப் பற்றாக்குறை எந்தவொரு திறமையான மாணவரும் நாட்டின் சிறந்த நிறுவனங்களில் படிப்பதைத் தடுக்காது என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை மேம்படுத்துவதன் மூலமும், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும் நிலையான வளர்ச்சி இலக்கு 4 மற்றும் தேசிய கல்வி கொள்கை 2020-ன் இலக்குகளுக்கு பிரதமரின் வித்யாலட்சுமி சாதகமான பங்களிப்பை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290972®=3&lang=1
***
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2291266)
आगंतुक पटल : 16