மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை சேவைகளை வலுப்படுத்தவும், பால் கூட்டுறவு சங்கங்களை விரிவுபடுத்தவும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 3:56PM by PIB Chennai

கால்நடை சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல், வெண்மைப் புரட்சி 2.0 -ஐ துரிதப்படுத்துதல், நாடு முழுவதும் தெரு நாய்களின் மனிதாபிமான நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட  திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்களை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தது.

 

கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால் மற்றும் வாய் நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்க, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில்  4,019 நடமாடும் கால்நடை அலகுகள் செயல்படுகின்றன.

 

2028-29 -ம் ஆண்டிற்குள் 75,000 புதிய பால் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதன் மூலமும், தற்போதுள்ள 46,422 சங்கங்களை வலுப்படுத்துவதன் மூலமும் பால் கூட்டுறவு கிராமங்களுக்கு பால் கூட்டுறவு திட்டத்தை விரிவுபடுத்துவதை வெண்மை புரட்சி 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் கூட்டுறவு பால் கொள்முதல் நாளொன்றுக்கு சராசரியாக 700 லட்சம் லிட்டரை எட்டியுள்ளது.

 

கால்நடை பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள், 2023 ஐ அறிவித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது, இது தெரு நாய்களை கருத்தடை மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மூலம் மனிதாபிமான மற்றும் அறிவியல் நிர்வாகத்திற்கான சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=228675&reg=3&lang=1

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2288038) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी