தேசிய மனித உரிமைகள் ஆணையம்
போபாலில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில், சக கைதிகளால் இரண்டு சிறார்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
प्रविष्टि तिथि:
16 JUL 2026 7:55PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில், இரண்டு சிறார்கள் சக கைதிகளால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டதாக வெளியான ஊடக செய்தி ஒன்றை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், அவை மனித உரிமை மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை எழுப்புகின்றன என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே, இது மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர், போபால் காவல் ஆணையர் ஆகியோருக்கு, இவ்விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
****
(Release ID : 2285504)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2285600)
आगंतुक पटल : 5