நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் தர நிர்ணய அமைப்புகளின் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது

प्रविष्टि तिथि: 16 JUL 2026 4:30PM by PIB Chennai

 இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய தர நிர்ணய அமைப்புகளின் தலைவர்களுக்கான இரண்டு நாள் கூட்டம் இன்று (16.07.2026) பெங்களூருவில் தொடங்கியது. இந்த உயர்மட்டக் கூட்டம், வளர்ந்து வரும் சந்தைகளில் தரமான உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.  தரப்படுத்தலில் ஒத்துழைப்பிற்கான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் இது கவனம் செலுத்துகிறது.

தூதுக்குழுவினரிடம் உரையாற்றிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பதவியின் முதன்மைக் கருப்பொருளான 'மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல்' என்பதன் கீழ், "உலகளாவிய நன்மைக்கான" இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.

அனைத்து நாடுகளின் மாறுபட்ட தேவைகளையும் வளர்ச்சி முன்னுரிமைகளையும் கருத்தில் கொள்ளும் வகையில் உள்ளடக்கிய, வெளிப்படையான, ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான செயல்முறைகள் மூலம் தரநிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியத் தரநிர்ணய அமைவினத்தின் வலுவான நிறுவன அடித்தளத்தைப் பாராட்டிய அவர், இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவம், சர்வதேச அறிவுப் பகிர்விற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்ய நாட்டை இது நிலைநிறுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் தேசிய தர நிர்ணய அமைப்புகளின் தலைவர்களின் கூட்டம், நாளையும் (2026 ஜூலை 17) தொடர்ந்து நடைபெறும். இதில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு தரப்படுத்தல் குறித்த கருப்பொருள் பயிலரங்கம் இடம்பெறும். இந்த அமர்வில், உலகளாவிய தர நிர்ணய அமைப்புகளின் நிபுணர் விளக்கங்கள் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285383&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2285575) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati