PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள்

प्रविष्टि तिथि: 05 JUL 2026 3:33PM by PIB Chennai

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கண்ணோட்டம்:

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டமான இபிபி திட்டம் (EBP - Ethanol Blended Petrol), இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, உயிரி எரிபொருள் உத்தி ஆகியவற்றின் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது. இது எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு ஆதரவளித்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதையும் ஊக்குவிக்கிறது.

இபிபி திட்டத்தின் கீழ், எத்தனால் கலப்பு 2013-14-ல் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நிலையிலிருந்து 2025-26-ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா 20 சதவீத கலப்பு இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளது. எத்தனால் கொள்முதல், 2013-14-ம் ஆண்டில் (ESY) சுமார் 38 கோடி லிட்டரிலிருந்து 2025-26-ல் 1,200 கோடி லிட்டருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உற்பத்தித் திறன் 2014-ல் 421 கோடி லிட்டரிலிருந்து 2026-ல் சுமார் 2,000 கோடி லிட்டராக, கிட்டத்தட்ட ஐந்து மடங்கு விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, மதிப்புமிக்க அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது. இது கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, புதிய சந்தை வாய்ப்புகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தையும் வலுப்படுத்தியுள்ளது.

எத்தனால் கலப்பின் மூலம் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல்:

இந்தியா தனது பயன்பாட்டில் கிட்டத்தட்ட 88.5 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எத்தனால் கலப்பு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இது தெளிவாக விளக்குகிறது. வெளிநாட்டிலிருந்து வாங்கப்படும் ஒவ்வொரு பேரல் எண்ணெயும், நாட்டின் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் அப்பாற்பட்டது.  விலை ஏற்ற இறக்கங்கள், விநியோகத் தடைகள் ஆகியவை சிக்கலை ஏற்படுத்தும். இந்தியக் கரும்பு, மக்காச்சோளம், அரிசி ஆகியவற்றின் போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் எத்தனால், உள்நாட்டில் விளையும் வளங்களைப் பயன்படுத்தி பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரு வழியை வழங்குகிறது.

சமூக வலைதள வதந்திகள்:

* எத்தனால் கலப்பு மைலேஜை குறைக்கிறது என்பது தவறானது.

* எத்தனால் கலப்பு பெட்ரோல், குறிப்பாகப் பழைய என்ஜின்களைச் சேதப்படுத்துகிறது என்பதும் வதந்திதான்.

தொழில்துறையின் நம்பிக்கைக் குரல்கள்:                          

விரிவான சோதனைகள், நிஜ உலக சேவைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, முன்னணி வாகன உற்பத்தியாளர்களும் எரிசக்தித் துறை நிபுணர்களும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகின்றனர்.

இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கு ஆற்றல் அளித்தல்:

எத்தனால் கலப்பு பெட்ரோல் (EBP-இபிபி) திட்டம், இந்தியாவின் எரிசக்தி உத்தியின் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது. இத்திட்டம் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. மாசு வெளியேற்றத்தைக் குறைத்துள்ளது, மேலும் விவசாயிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளின் பயன்பாட்டையும் ஊக்குவித்துள்ளது. இபிபி திட்டம், தூய்மையான, மீள்திறன் கொண்ட, தன்னிறைவு பெற்ற போக்குவரத்து எரிபொருள் சூழலமைப்பிற்குத் தொடர்ந்து பங்களிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281287&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281339) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati