பாதுகாப்பு அமைச்சகம்
கிழக்குக் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த உதயகிரி, கவரத்தி, சக்தி ஆகிய கப்பல்கள் சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தை சென்றடைந்தன
प्रविष्टि तिथि:
02 JUL 2026 6:52PM by PIB Chennai
இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்திய ஃபிளாக் ஆபிசர் ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தாவின் தலைமையில் இயங்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான உதயகிரி, கவரத்தி, சக்தி ஆகியவை 2026 ஜூலை 1 அன்று சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தை வந்தடைந்தன.
இந்த வருகை இரு கடற்படைகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவுகளுக்குச் சான்றாக அமைந்துள்ளது. அத்துடன், இந்திய அரசின் 'கிழக்கு நோக்கிய செயல்பாடு' கொள்கை மற்றும் 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றுடன் இணக்கமாகவும், 'ஆசியான் - இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு 2026'-ன் நோக்கங்களை முன்னெடுக்கும் வகையிலும், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியக் கடற்படை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாகவும் இது திகழ்கிறது.
கூட்டு கடல்சார் பாதுகாப்பை வளர்ப்பதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பங்காளர்களிடையே கூட்டுறவை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. சிங்கப்பூர் பயணம் இந்த நோக்கங்களை வலுப்படுத்துவதுடன், பாதுகாப்பான, உறுதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கடல்சார் சூழல் குறித்த பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்தவும் ஆதரவளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280455®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2280564)
आगंतुक पटल : 8