சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜெ.பி. நட்டா 'ஆரோக்கிய சேது 2.0' செயலியைத் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 4:49PM by PIB Chennai

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜெ.பி.  நட்டா இன்று 'ஆரோக்கிய சேது 2.0' என்ற புதிய தேசிய சுகாதார செயலியை அறிமுகப்படுத்தினார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொடர்பு தடமறிதல் மற்றும் விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, தற்போது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொலைநோக்குப் பார்வையுடன் குடிமக்களுக்கான ஒரு முழுமையான டிஜிட்டல் சுகாதார நுழைவாயிலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

ஏறக்குறைய 20 கோடி பதிவிறக்கங்களைக் கொண்டுள்ள இந்தச் செயலியானது, மக்களின் அன்றாட சுகாதாரத் தேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை உருவாக்கவும், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவ அறிக்கைகளை டிஜிட்டல் முறையில் பதிவேற்றவும் முடியும். மேலும், தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களைக் கண்காணிப்பதுடன், அணியக்கூடிய சாதனங்களை இதனுடன் இணைத்து உடற்பயிற்சி மற்றும் இதர ஆரோக்கியத் தரவுகளை நிர்வகிக்கலாம்.

 

இந்தச் செயலியின் பிற முக்கிய அம்சங்களாக பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் தனியார் காப்பீடு விவரங்களை அறிதல், நிகழ்நேர இரத்த இருப்பு விவரங்கள் , ஆம்புலன்ஸ் முன்பதிவு, குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை நிர்வகித்தல் மற்றும் மருந்து உட்கொள்வதற்கான நினைவூட்டல்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்ய 'எனது ஒப்புதல்' என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இது சுகாதாரத் தகவல்களை யார் அணுகலாம் என்பதை பயனர் தீர்மானிக்க வழிவகுக்கிறது. டிஜிட்டல் சுகாதாரத்தைப் பொதுமக்களிடையே எளிமையாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு சேர்ப்பதே இந்த 2.0 பதிப்பின் முக்கிய நோக்கமாகும்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278988&reg=3&lang=1

 

செய்தி அடையான எண்:2278988

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2279187) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu