பிரதமர் அலுவலகம்
ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2026 9:39AM by PIB Chennai
ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவர்களின் தியாகம், நமது மக்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கு ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரிவினை, அநீதி மற்றும் அதிருப்தியை உருவாக்கும் அழிவு சக்திகளை உறுதியாக எதிர்த்து நிற்கும் அதே வேளையில், தேசத்தை வளமானதாகவும், விழிப்புணர்வு மிக்கதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றும் நற்பண்புகளை சமூகத்திற்குள் வளர்க்குமாறு கடின உழைப்பாளிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பிரதமர் பகிர்ந்துகொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:
“இந்த நாளில், ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம், நமது மக்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கு ஒரு வலிமையான நினைவூட்டலாகத் திகழ்கிறது. அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் உறுதியும், சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் ஆகிய விழுமியங்களைக் காக்கத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.”
“உழைப்பாளிகளே! உங்கள் சமுதாயத்தில், தேசத்தைச் செழிப்பானதாகவும், விழிப்புணர்வு மிக்கதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் ஆக்கும் நற்பண்புகளை வளர்த்தெடுங்கள். அதே சமயம், சமுதாயத்தில் பிளவு, அநீதி மற்றும் அதிருப்தியை உருவாக்கும் அழிவு சக்திகளை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2251386®=3&lang=1
****
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2277796)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada