பிரதமர் அலுவலகம்
'தாயின் பெயரில் மரக்கன்று நடும்' இயக்கத்தின் கீழ், வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்ததற்காக, உத்தரப் பிரதேச மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2026 11:40PM by PIB Chennai
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில், சிறப்பான சாதனை படைத்ததற்காக, உத்தரப் பிரதேச மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 'தாயின் பெயரில் மரக்கன்று நடும்' இயக்கத்துடன் தொடர்புடைய இந்த அற்புதமான வெற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மக்கள் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநில மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில், இத்தகைய உன்னதமான முன்முயற்சிகள், நீண்ட காலத்திற்குப் பெரிதும் பயனளிக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269663®=3&lang=1
(Release ID: 2269663)
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2269732)
வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க:
Manipuri
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada