நிதி அமைச்சகம்
திரிபுராவின் உதய்ப்பூரில் நிதிச் சேவைகள் துறை சார்பில் கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 4:03PM by PIB Chennai
திரிபுரா மாநிலம், கோமதி மாவட்டம், உதய்பூரில் நேற்று (26.05.2026), நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் திரு எம் நாகராஜு தலைமையில் ஒரு கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கோமதி மாவட்டம், உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பல்வேறு வங்கிகளின் மூலம் 4,577 பயனாளிகளுக்கு ரூ 105.40 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. நபார்டு, சிட்பி வங்கிகள் பல்வேறு திட்டங்களுக்காக ரூ 2 கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தன. மேலும், பள்ளிகள், அங்கன்வாடிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, வங்கிகள் தங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் கீழ் நிதியுதவிகளை வழங்கின.
இப்பகுதியில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்கவும், கடன் வாங்குபவர்களுக்கு ஆதரவளிக்கவும் சிட்பி வங்கியின் தொகுப்பு மேம்பாட்டுக் கிளை ஒன்று உதய்பூரில் திறந்து வைக்கப்பட்டது. அதே நேரத்தில், நிதிச் சேவைகள் துறை, 'நிதி உள்ளடக்கம் 2.0' என்ற தொலைநோக்கு ஆவணத்தையும் இந்நிகழ்ச்சியின்போது வெளியிட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265851®=3&lang=1
(Release ID : 2265851)
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266008)
வருகையாளர் எண்ணிக்கை : 14