ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினம் 2026: பெண்களுக்கான முழுமையான நலவாழ்வுத் திட்டத்துடன் கேரளாவில் நடைபெற்று வரும் சிறப்பு நிகழ்வுகள்

प्रविष्टि तिथि: 21 MAY 2026 6:42PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, "மாதவிடாய் நிறுத்தத்திற்கான யோகா – ஒரு முழுமையான நலவாழ்வு மாதிரி" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து, கலாத்திப்பாடியில் உள்ள இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம்  இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதிலும், அவர்களின் முழுமையான நலவாழ்வை மேம்படுத்துவதிலும் யோகா மற்றும் ஆயுர்வேதம் வகிக்கும் முக்கியப் பங்களிப்பு குறித்த இந்த நிகழ்ச்சி சிறப்பாக எடுத்துக் காட்டியது. இந்நிகழ்வில் சமூக உறுப்பினர்கள், யோகாப் பயிற்சியாளர்கள் மற்றும் நலவாழ்வு நிபுணர்கள் எனப் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் நலவாழ்வை உறுதிசெய்யும் வகையில், ஆயுர்வேதக் கோட்பாடுகள், பாரம்பரிய யோகாப் பயிற்சிகள், பிராணாயாமம், தளர்வுப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த வழிமுறைகளை ஒருங்கிணைப்பது குறித்த கருப்பொருள் அமர்வுகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஹார்மோன், உணர்வு மற்றும் வளர்சிதை மாற்றங்களில், மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு இயல்பான காலகட்டம் என்பதை இந்த அமர்வு தெளிவுபடுத்தியது. மேலும், உடல்ரீதியான நிலை, உணர்வுச் சமநிலை, மன அழுத்தக் குறைப்பு, சிறந்த உறக்கம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை அடைவதற்கு யோகா எவ்வாறு துணைபுரியும் என்பதையும் இந்த நிகழ்வு விரிவாக விளக்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263879&reg=3&lang=1

***

TV/SV/SE

 


(रिलीज़ आईडी: 2263937) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Malayalam